கனடா உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகும் இந்தியர்

தினமலர்  தினமலர்
கனடா உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாகும் இந்தியர்

டொரோன்டோ:கனடா உச்ச நீதிமன்ற நீதிபதியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். வட அமெரிக்க நாடான கனடாவில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள ரோசாலி சில்பர்மேன் அபெல்லா ஓய்வுபெற உள்ளார்.

இதையடுத்து புதிய நீதிபதி தேர்வு குறித்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: கனடா உச்ச நீதிமன்ற நீதிபதியாக, ஓன்டாரியோ மாகாண மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹ்மூத் ஜமாலை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நீதிபதி ஜமாலுக்கு, சட்டம் மற்றும் கல்வி துறையில் உள்ள அனுபவமும், பிறருக்கு சேவை செய்வதில் அவருக்கு உள்ள அர்ப்பணிப்பும், நம் நாட்டு உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு மதிப்புமிக்க சொத்தாக இருக்கும் என்பதை அறிவேன்.இவ்வாறு அவர் கூறினார்.கனடா உச்ச நீதிமன்றத்தில், நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்திய வம்சாவளி என்ற பெருமையை ஜமால் பெற்றுள்ளார்.

மூலக்கதை