ஆப்கனுக்கு ரூ.9000 கோடி; உலக நாடுகள் நிதியுதவி

தினமலர்  தினமலர்
ஆப்கனுக்கு ரூ.9000 கோடி; உலக நாடுகள் நிதியுதவி

ஜெனீவா: ஆப்கன் மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்காக, உலக நாடுகள் 9,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.ஆப்கனில் தலிபான் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அங்குகடுமையான உணவுப்பஞ்சம் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

உயர்மட்டக் குழு கூட்டம்


மேலும் ஆப்கனில் இருந்து வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கானோர் காபூல்விமான நிலையம் ஆப்கன் - பாக்., எல்லை ஆகியவற்றில் கூடிஉள்ளனர். இது தவிர ஏராளமானோர், உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்துஉள்ளனர்.இவர்களுக்கு உணவு, குடிநீர் தங்கும் முகாம்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டிஉள்ளது. இதையடுத்து, ஆப்கன் மக்களின் துயரம் குறித்து ஆராய சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா., சபையின் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், ஐ.நா., மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் அவசர நிவாரண துறையின் துணை பொதுச் செயலர் மார்டின் கிரிப்பித் பேசியதாவது: ஆப்கனில் 1.10 கோடி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, ஐ.நா., அமைப்புகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் சார்பில் 4,750 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது. இது தவிர, ஆப்கன் மக்களின் துயர் தீர்க்க, உறுப்பு நாடுகள் 9,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்து உள்ளன. இவ்வாறு அவர்பேசினார்.

உதவ முடியாது

இந்நிலையில், ஐ.நா.,பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஆப்கன் மக்கள் படும் துயரம் கவலை அளிக்கிறது. தலிபான் அரசின் தயவின்றி, ஆப்கன் மக்களுக்கு உதவ முடியாது.கடந்த 1947ம் ஆண்டு முதல் ஆப்கனில், ஐ.நா., அலுவலகம் மக்களுக்கு உதவி வருகிறது. இவ்வாறு அவர்பேசினார். இதற்கிடையே, ஐ.நா., பொதுச் சபையின் 76வது உயர் மட்டக் குழு கூட்டம் அடுத்த வாரம் நடக்கிறது. இதில், பிரதமர்மோடி கலந்து கொண்டு செப்.25ம் தேதி உரையாற்ற உள்ளார்.

ஜெனீவா: ஆப்கன் மக்களின் துயர் துடைப்பு பணிகளுக்காக, உலக நாடுகள் 9,000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளன.ஆப்கனில் தலிபான் ஆட்சி அமைந்துள்ள நிலையில், அங்குகடுமையான

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை