வலைதள மோசடி அதிகரிப்பு

தினமலர்  தினமலர்

நியூயார்க்: கொரோனா பிரச்னையை பயன்படுத்தி, போலி வலைதளங்கள் மூலம், மக்களை ஏமாற்றி பணம் பறிப்பது, தகவல்களை திருடுவது ஆகியவை அதிகரித்துள்ளதாக, ஐ.நா., தெரிவித்து உள்ளது.இந்தாண்டு, ஜன., - மார்ச் வரை, போலி வலைதளங்களின் மோசடி குறித்த புகார்கள், 350 சதவீதம் அதிகரித்துள்ளன. இதனால், ஏராளமான மருத்துவமனைகள், சுகாதார பாதுகாப்பு திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா., தெரிவித்துள்ளது.

மூலக்கதை