சவுதியில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1,859 பேர் மீட்பு

தினமலர்  தினமலர்
சவுதியில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 1,859 பேர் மீட்பு

ரியாத் : சவுதியில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,859 பேர் மீட்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. சவுதியில் நோய் பாதிப்பு அதிகரித்து இன்று ஒரே நாளில் 1,567 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சவுதியில் நோய் தொற்றில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2,85,793 ஆக அதிகரித்தது. தற்போது 33,752 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சவுதியில் கொரோனா தொற்றால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,903 ஆக உயர்ந்தது.


சவுதியில் கொரோனா பாதிப்புகளில் இருந்து 1,859 பேர் புதிதாக மீட்கப்பட்டுள்ளனர். இது மொத்த மீட்டெடுப்புகளை 2,48,948 ஆக உயர்த்தியுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் 1,892 பேர் உள்ளனர்.

மூலக்கதை