கொரோனா நிதியில் கார் வாங்கியவர் கைது
வாஷிங்டன்: அமெரிக்காவில், டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த, லீ பிரைஸ் என்ற இளைஞர், போலி நிறுவனம் மூலம், தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதாக கூறி, அரசிடம், 1.50 கோடி ரூபாய் பெற்றுள்ளார். கொரோனா நிவாரண நிதியில் வழங்கப்பட்ட இத்தொகையை, ஆடம்பர கார், கைக்கடிகாரம் வாங்கவும், கிளப்புகளில் சீட்டாடவும் பயன்படுத்தியுள்ளார். இதுபற்றி தெரியவந்ததும், போலீசார், லீ பிரைஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.