குவைத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 688 பேர் மீட்பு

தினமலர்  தினமலர்
குவைத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 688 பேர் மீட்பு

கெய்ரோ : குவைத்தில் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 688 பேர் மீட்கப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவி, அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. குவைத்தில் நோய் பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 463 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 67,911 ஆக அதிகரித்தது கொரோனாவால் நேற்று புதிதாக 4 பேர் பலியாகினர். குவைத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 457 ஆக உயர்ந்தது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 319 பேர் குவைத்தையும், 144 பேர் மற்ற பிற நாடுகளையும் சேர்ந்தவர்களாவர்.


குவைத்தில் கொரோனா பாதிப்புகளில் இருந்து ஒரே நாளில் 688 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நாட்டில் நோய் தொற்றில் இருந்து மீ்ட்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 59,213 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2,041 பேருக்கு தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. இதுவரை 509,561 பேரின் மாதிரிகள் சேகரிக்கபப்ட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன.


மூலக்கதை