சீனாவில் பரவும் 'புபோனிக் பிளேக்': சிகிச்சை எடுக்காவிட்டால் 24 மணி நேரத்தில் மரணம்

தினமலர்  தினமலர்
சீனாவில் பரவும் புபோனிக் பிளேக்: சிகிச்சை எடுக்காவிட்டால் 24 மணி நேரத்தில் மரணம்

பீஜிங்: சீனாவில் பரவும் 'புபோனிக் பிளேக்' என்னும் புதுவகை நோய் பரவும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் மங்கோலியா கோவ்ட் தன்னாட்சி பிரதேசத்திலுள்ள பயன்னுர் நகரில் 'புபோனிக் பிளேக்' எனப்படும் நோய் 27 வயது நபர் ஒருவருக்கும் அவரது சகோதரருக்கும் (17) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் மர்மோட் எனப்படும் காட்டு எலி போன்றவற்றின் இறைச்சியை சாப்பிட்டதால் நோய் ஆளாகி உள்ளதாக தெரிகிறது. எனவே மக்கள் யாரும் மர்மோட் இறைச்சியை உண்ண வேண்டாம் என்று அந்நாட்டு செய்தி நிறுவனமான ஷின்ஹுவா அறிவுறுத்தியுள்ளது.


விலங்குளிடம் இருந்து பரவும் இந்த புபோனிக் நோய் அவற்றை கடிக்கும் பூச்சிகள் வாயிலாக மனிதர்களுக்கும் பரவக்கூடியது. நோய் வந்து இறந்த விலங்குகளில் இருந்து வெளியாகும் திரவங்கள் வாயிலாகவும் யெர்சினியா என்ற பாக்டீரியா மூலமாகவும் இந்த நோய் பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்க்கான சிகிச்சையை உடனடியாக எடுக்காத பட்சத்தில் 24 மணி நேரத்தில் நோய் பாதித்தவருக்கு மரணம் ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை