ஓமனில் புதிதாக 770 பேருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
ஓமனில் புதிதாக 770 பேருக்கு கொரோனா

மஸ்கட் : ஓமனில் கொரோனா பாதிப்பு அதிகரித்து மேலும் 770 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 5 பேர் பலியாகினர் என அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவி வருகிறது. ஓமனிலும் நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், ஒரு நாளில் புதிதாக 770 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 15,086 ஆக அதிகரித்தது. மேலும் கொரோனாவால் நேற்று 5 பேர் பலியாகினர். கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது.


ஓமனில் இதுவரை 3,451 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 2,463 பேர் பரிசோதிக்கப்பட்டனர். தொடர்ந்து, 60 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். இவ்வாறு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.


மூலக்கதை