தொண்டு நிறுவனத்தில் இந்தியருக்கு பதவி
நியூயார்க்:அமெரிக்காவின் நியூயார்க்கில், ஏ.இ.எப்., எனப்படும், 'அகன்ஷா கல்வி நிதியம்' என்ற தனியார் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த தொண்டு நிறுவனம், இந்தியாவில், மும்பை மற்றும் புனேயில் உள்ள ஏழை எளிய குழந்தைகளுக்காக இயங்கும், 21 பள்ளிகளுக்கு, தேவையான நிதிகளை வழங்கி உதவி வருகிறது.இந்நிலையில், இந்த தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக, அமெரிக்க வாழ் இந்தியரான சேஜல் தேசாய் என்பவர், நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஏ.இ.எப்., வாரியத்தின் தலைவர் ரமேஷ் ஸ்ரீநிவாசன் கூறுகையில்,“டெக்சாஸில் வசிக்கும் சேஜல் தேசாயின் குடும்பத்தினர் மும்பையில் உள்ளனர். எனவே, மும்பையை நன்கு அறிந்த இவரின் நியமனம், அமைப்பின் வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கும்,” என்றார்.