இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை..! அதிகாரிகள் அட்வான்ஸ் குழு நாளை காலை தமிழகம் வருகிறது

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்து பிரதமர் இந்தியா வருகை..! அதிகாரிகள் அட்வான்ஸ் குழு நாளை காலை தமிழகம் வருகிறது

மீனம்பாக்கம்: அடுத்தமாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இங்கிலாந்து பிரதமர் தமிழகத்துக்கு வருகிறார். இதையொட்டி அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்நாட்டின் சிறப்பு குழுவினர் நாளை சென்னைக்கு வருகின்றனர்.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அப்போது அவர் தமிழகம் வருகை தருகின்றார். இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமரின் பாதுகாப்பு சிறப்பு உயரதிகாரிகள் உட்பட 7 பேர் கொண்ட அட்வான்ஸ் குழுவினர் நாளை காலை சென்னை வருகை வருகின்றனர்.



பின்னர் இவர்கள் டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு மதுரை செல்கின்றனர். மதுரையில் ஆய்வை முடித்துவிட்டு நாளை மாலை விமானத்தில் சென்னை வருகின்றனர்.

சென்னையில் தங்களது ஆய்வை முடித்துவிட்டு நாளை மறுநாள் புனே செல்கின்றனர். இங்கிலாந்து பிரதமர் தமிழக சுற்றுப்பயணத்தின்போது எந்தெந்த பகுதிகளை பார்வையிடுகிறார்.

யாரையெல்லாம் சந்திக்கிறார் என்பது அட்வான்ஸ் குழுவினர்தான் உறுதிப்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

.

மூலக்கதை