சம்பளம் போதவில்லை: பிரிட்டன் பிரதமர் ராஜினாமா?

தினமலர்  தினமலர்
சம்பளம் போதவில்லை: பிரிட்டன் பிரதமர் ராஜினாமா?

லண்டன்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சம்பளத்தை காரணம் காட்டி, அடுத்த ஆண்டு, தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் ஆண்டுக்கு 2.4 கோடி ரூபாய், வருமானம் பெற்று வந்துள்ளார். ஆனால், தற்போது பிரதமராக ஆண்டிற்கு சம்பளமாக 1.3 கோடி ரூபாய் பெறுவதாகவும், இது, அவருக்கு போதுமானதாக இல்லை எனவும் கூறப்படுகிறது. இதனை காரணம் காட்டி அடுத்தாண்டு தன் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


போரிஸ் ஜான்சனின் குழந்தைகளுக்கான நிதி தேவை இருப்பதால் தனது முன்னாள் மனைவிக்கும் பணம் வழங்க வேண்டிய நிலையில் போரிஸ் ஜான்சன் இருப்பதாகவும் பெயர் வெளியிடாத எம்.பி ஒருவர் கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மூலக்கதை