பாக்., பொய் பிரசாரம்: இந்தியா பதிலடி

தினமலர்  தினமலர்
பாக்., பொய் பிரசாரம்: இந்தியா பதிலடி

நியூயார்க் : 'தன் மோசமான திட்டங்களை நிறைவேற்றும் வகையில், ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பொய் பிரசாரம் செய்யப்படுகிறது' என, பாக்., கின் பேச்சுக்கு, இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு, நம் அண்டை நாடான பாக்., தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக ஐ.நா., உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் தொடர்ந்து பிரச்னை எழுப்பி வருகிறது. இதற்கு, இந்திய அரசும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.இந்த நிலையில், காலனியாதிக்க முறைக்கு எதிரான ஐ.நா.,வின் குழுவின் கூட்டம் நடந்து வருகிறது.

கடந்த வாரம், இந்தக் கூட்டத்தில் பேசிய, பாக்.,கின் ஐ.நா.,வுக்கான தூதர், மலீகா லோதி, ஜம்மு - காஷ்மீர் விவகாரம் குறித்து குறிப்பிட்டார்.இந்தக் கூட்டத்தில் பேசிய, ஐ.நா.,வுக்கான இந்தியக் குழுவைச் சேர்ந்த, தீபக் மிஸ்ரா, பாக்.,குக்கு பதிலடி கொடுத்தார்.

அவர் கூறியதாவது:கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய பிரச்னை குறித்து பேசாமல், தேவையில்லாத பிரச்னையை பாக்., எழுப்பியுள்ளது. தன் மோசமான திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, பொய்யான ஒரு விஷயத்தை, கட்டுக்கதையை, பாக்., தொடர்ந்து பரப்பி வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

மூலக்கதை