பொன்விழா படங்கள்: நிறைகுடம்
உதிரிபூக்கள் மகேந்திரன் கதை சினிமாவானது சிறிய பட்ஜெட்டல் அழகான, அழுத்தமான படங்களை கொடுத்தவர் முக்தா சீனிவாசன். இவர் இயக்கும் படங்கள் அனைத்ததையும், இவரது அண்ணன் முக்தா ராமசாமி தயாரிப்பார். அப்படி உருவான படங்களில் ஒன்று தான் நிறைகுடம். சிவாஜி, முத்துராமன், வாணிஸ்ரீ, மேஜர் சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி, சோ, மனோரமா, சச்சு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வி.குமார் இசை அமைத்திருந்தார். பாடல்களை கண்ணதாசன் எழுதினார், எம்.கர்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் சினிமாவுக்கு அழைத்து வரப்பட்ட இயக்குனர் மகேந்திரன் அப்போது திரைப்படங்களுக்கு கதை எழுதி கொடுத்து வந்தார். நாம் மூவர், சபாஷ் தம்பி, பணக்காரபிள்ளை படங்களுக்கு கதை எழுதிய மகேந்திரன் எழுதிய நிறைகுடம் கதையை முக்தா சீனிவாசன் சினிமாவாக்கினார். இந்த படமும் 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது.
"ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம்...." என்று கண்ணதாசன் தான் எழுதிய பாடலில் "நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால் ரசிகனுக்கு அதுதான் சுபதினம்..." என்றும் எழுதி இருந்தார். அந்த அளவுக்கு தூய்மையான படமாக நிறைகுடம் அமைந்தது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
