மெக்சிகோவில் ஒரே நாளில் 3,377 பேருக்கு கொரோனா

தினமலர்  தினமலர்
மெக்சிகோவில் ஒரே நாளில் 3,377 பேருக்கு கொரோனா

மெக்சிகோ : மெக்சிகோவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகளால் ஒரே நாளில் மேலும் 3,377 பேர் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது.


கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. மெக்சிகோவில் கொரோனா பாதிப்பு 80,000 ஐ தாண்டியது. இது தொடர்பாக சுகாதாரதுறை கூறுகையில், நாட்டில் அதிகரித்த கொரோனா பாதிப்புகளால் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 3,377 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 81, 400 ஆக அதிகரித்தது. நோய் தொற்று அதிகரித்து ஒரே நாளில் 477 பேர் பலியாகினர். இதனால் நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 9,044 ஆக அதிகரித்தது.


தற்போது பாதிப்புகள் தொடர்ந்து கூடிக்கொண்டே செல்கிறது. இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. நோய் தொற்றிலிருந்து இதுவரை 56,638 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


மூலக்கதை