15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு

தினமலர்  தினமலர்
15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு

பாரிஸ்: கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் தனது 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.


அந்நிறுவனத்தின் வாகன உற்பத்தி, மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் செலவினங்களை கட்டுப்படுத்த உற்பத்தியை 20 சதவீதம் குறைத்து கொள்ள திட்டமிட்டுள்ளது. மேலும் சக கார் தயாரிப்பு நிறுவனங்களான நிஸான் மற்றும் மிட்சுபிஸியுடன் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு அடிப்படையில் உலக சந்தையில் விற்பனையை பிரித்து கொள்ள முடிவு செய்துள்ளது.


அதன் அடிப்படையில் வட அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானில் நிஸான் நிறுவனமும், ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் ரெனால்ட் நிறுவனமும், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் மிட்சுபிஸி நிறுவனமும் தங்களது சந்தையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளன.

மூலக்கதை