பா.ஜ. தலைமை அலுவலகம் வந்தார் பிரதமர் மோடி
புதுடில்லி: பிரதமர் மோடி இன்று பா.ஜ. தலைமை் அலுவலகம் வந்தார். பா.ஜ. மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று மாலை கட்சி தலைமை அலுவலகமான டில்லியில் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வந்தார். அவரை பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷா வரவேற்றார். தற்போது ஐந்து மாநில சட்டசபை தேர்தல் , 2019-ம் ஆண்டு பார்லி.லோக்சபா தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காகவும் தேர்தல் வெற்றி வியூகம் குறித்தும், இந்த கூட்டம் நடக்க உள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.