விக்ட்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து : 224 பேர் பலி
டோடோமா : டான்சானியாவில் உள்ள விக்ட்டோரியா ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் டான்சானியாவில் இருந்து 300க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட படகு வன்ஸா மாவட்டம் வந்த போது அதிகம் பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்தது. இதில் அந்த படகில் பயணம் செய்த பலர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புப் படையினர் ஏரியில் மூழ்கி உயிருக்கு போராடிய 100க்கும் மேற்பட்டோரை காப்பாற்றி பத்திரமாக கரைக்கு அழைத்து வந்தனர். படகு விபத்தில் உயிரிழந்த 224 பேரின் உடல்கள் இதுவரை கரை மீட்கப்பட்டுள்ளது. ஏரியில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருவதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றி கொண்டு சென்றதே இந்த விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்திற்கு காரணமான படகு நிறுவனத்தின் நிர்வாகிகளை கைது செய்யும்படி அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். 1996-ம் ஆண்டு இதே விக்டோரியா ஏரியில் நிகழ்ந்த படகு விபத்தில் 50 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.