நிலக்கரி சுரங்கத்தில் விபத்து : 9 தொழிலாளர்கள் பலி

தினமலர்  தினமலர்

பெஷாவர்: பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியாகினர். பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் அகோர்வால் என்ற பகுதியில் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இங்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்ட போது மீத்தேன் வாயு வெடித்தது. இதில் ஏற்பட்ட விபத்தில் 9 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்க விபத்தில்ஆண்டு தோறும் 100 முதல் 200 தொழிலாளர்கள் பலியாகின்றனர். இதற்கு நவீன சுரங்க வசதிகள், பயிற்சி மற்றும் சாதனங்கள் இல்லாதது காரணமாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்டில் பலுசிஸ்தானில் சுரங்க விபத்தில் 13 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதேபோல் செப். 2ந் தேதி பலுசிஸ்தானில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

மூலக்கதை