சென்னை அணி 7 விக்கெட்டுகளால் இலகு வெற்றி!
நடைபெற்றுவரும் ஐ.பி.எல். தொடரின் 23 ஆவது போட்டியில் கொல்கத்தா அணியை 7 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டது சென்னை அணி.
சென்னை, சிதம்பரம் மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது.
அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணிக்கு சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் மிரட்டலான பந்துவீச்சை மேற்கொண்டனர்.
இதனால் மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் நிலைவில், 9 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அணி சார்பாக அன்ட்ரூ ருசெல் ஆட்டமிழக்காமல் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட்டங்களுடனும், ஓட்டமற்றும் ஆட்டமிழந்தனர்.
சென்னை அணி சார்பாக மிரட்டல் பந்துவீச்சை மேற்கொண்ட தீபக் சாகர் 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் மற்றும் இம்ரான் தகீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அத்துடன் ஜடேஜா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், பதிலுக்கு 109 என்ற இலகுவான வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அந்தவகையில் சென்னை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.
அணி சார்பாக டூ பிளெசிஸ் ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களையும் அம்பதி ராயுடு 21 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் கொல்கத்தா அணி சார்பாக சுனில் நரைன் 2 விக்கெட்டுகளையும், பியூஸ் சாவ்லா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
’ஓபன் செய்த உடன் ரீல்ஸ்’ இன்ஸ்டாகிராமில் வரும் சூப்பர் அப்டேட்
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
காவிரி பாசன மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு; நடவடிக்கை எடுக்க அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
