தென்னாபிரிக்காவில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்...... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
தென்னாபிரிக்காவில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்...... ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஜோகனஸ்பர்க்: தென்னாபிரிக்காவில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின்  பரிந்துரையை ஏற்ற ஐக்கிய நாடுகள் சபை, ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என அறிவித்தது. இதன்படி 177 நாடுகளில் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் பல்வேறு யோகா பயிற்சிகள் நடைபெறும். இந்த ஆண்டு சர்வதேச யோகா தினம் வருகிற 21ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஜோகனஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் தென்னாபிரிக்க வாழ் இந்தியர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சி மேற்கொண்டனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள் என பல தரப்பினரும் பல்வேறு யோகா பயிற்சியை மேற்கொண்டனர். இதேபோல் டர்பன் நகரிலும் யோகா பயிற்சி நடத்தப்பட்டது. 

மூலக்கதை