மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் அரசு ஒப்புதல்

தினமலர்  தினமலர்
மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் அரசு ஒப்புதல்



லண்டன்: தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ. 9,000 கோடிக்கு மேல் கடன் பெற்று திருப்பிச் செலுத்த முடியாமல் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார். தற்போது லண்டனில் வசித்து வருகிறார். இவர் மீது இந்தியாவில் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கும் நிலுவையில் உள்ளது. அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி பிரிட்டன் அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் , விஜய் மல்லையாவை நாடு கடத்த ஒப்புதல் சான்று வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இந்தியா சார்பில் பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு மல்லையாவுக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் மல்லையாவை இந்தியா கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கையை துரிதப்படுத்தியுள்ளது.

மூலக்கதை