டமாஸ்கஸில் பள்ளி மீது அமெரிக்க ஆதரவு விமான படைகள் தாக்குதல்: 33 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்

டமாஸ்கஸ்: உள்நாட்டுப் போருக்கு பயந்து டமாஸ்கஸில் உள்ள பள்ளியில் அடைக்கலம் இருந்த 33 பேர் அங்கு நடத்தப்பட்ட தாக்குதலில் பலியாகியுள்ளனர். சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி வைத்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை அங்கிருந்து விரட்டுவதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் அந்நாட்டு முப்படைகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் தென் பகுதியான ரக்கா மாகாணத்தின் அல்-மன்சோரா நகரில் உள்ள ஒரு பள்ளிக் கட்டிடத்தின் மீது, அமெரிக்காவின் ஆதரவு பெற்ற விமானப் படை நேற்று நடத்திய தாக்குதலில் 33 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. பலியானவர்கள் அனைவரும் உள்நாட்டுப் போருக்கு பயந்து அலெப்போ மற்றும் ரக்காவின் பிறபகுதிகளில் இருந்து அடைக்கலம் தேடிவந்து, இந்த பள்ளியில் தங்கியிருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை