தெற்கு சூடானில் விமான விபத்து: 44 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்!

தினகரன்  தினகரன்

ஜூபா: தெற்கு சூடானைச் சேர்ந்த ‘தி சவுத் சுப்ரீம் ஏர்லைன்ஸ்’க்கு சொந்தமான விமானம் ஒன்று விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. தெற்கு சூடானில் வடமேற்கு பகுதியில் உள்ள ஜூபாவில் இருந்து வாவு நகருக்கு வந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த விபத்து மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என அந்நாட்டு அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் அடெனி தகவல் தெரிவித்தார். விமானத்தின் வால்பகுதி மட்டும் தெரியும்படியும், மற்ற பகுதியில் எரிந்த நிலையில் சிதறிக்கிடக்கும் படங்களை உள்ளூர் தொலைக்காட்சிகள் வெளியிட்டதால் விமானத்தில் இருந்த விமான ஊழியர்கள் உள்பட 44 பயணிகளும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். விமானத்தில் இருந்த அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டது அனைவரையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் 41 பேரும் 3 குழந்தைகளும் இருந்தனர். இதில் பலத்த காயமடைந்த 25 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மூலக்கதை