தெற்கு சூடானில் விமான தீப்பற்றி எரிந்த விபத்து : மோசமான வானிலை காரணம் என தகவல்!

தினகரன்  தினகரன்

தெற்கு சூடானில் நிகழந்த விமான விபத்து ஒன்றில் 37 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்நாட்டின் தலைநகர் ஜுபாவிலிருந்து, வாவ் நகருக்கு அந்த விமானம் சென்றது. விமானம் தரையிரங்கியதும் இயந்திரத்தில் தீப்பிடித்தது. உடனடியாக பயணிகள் அனைவரும் அவரச வழியாக வெளியேறினர். இதனை தொடர்ந்து பற்றி எரிந்த விமானம் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. சம்பவ இடத்திறணு்கு வந்த தீயணைப்பு லீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். மோசமான வானிலையால் ஓடுபாதையிலிருந்து விலகி சென்று தீப்பிடித்திருக்கலாம் என தெற்கு சூடான் அரசு கூறியுள்ளது.  

மூலக்கதை