யாழ்ப்பாணம் சிறையில் தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம்

தினமலர்  தினமலர்

யாழ்ப்பாணம் : இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 31 பேர், விடுவிக்க கோரி உண்ணா விரதம் துவக்கினர். ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நாகை ஆகிய பகுதியில் இருந்து இரு மாதங்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 31 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் மீது ஊர்காவல்துறை மீன்துறையினர் வழக்கு பதிந்து, யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் நடக்கின்றன.இந்நிலையில் யாழ்ப்பாணம் சிறையில் உள்ள மீனவர்கள் 31 பேரும், நேற்று முதல் உண்ணாவிரதம் துவக்கியுள்ளனர். இந்திய துணை துாதரக அதிகாரிகள், தமிழக மீனவர்களை சந்தித்து சமரசம் செய்தனர். ஏற்க மறுத்த மீனவர்கள் உண்ணாவிரதத்தை தொடர்வதாக, ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை