பிரித்தானிய சிறையில் நடந்த கொடூரம்!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரித்தானிய சிறையில் நடந்த கொடூரம்!

 பிரித்தானியாவில் ஆண்கள் சிறையில் இரு சிறைக்கைதிகள் ஒருவரை ஒருவர் மல்யுத்த வீரர்கள் போல் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
பிரித்தானியாவின் வெர்சஷ்டர் பகுதியின் டார்டிபிக்கி கிராமத்தில் HMP ஹெல்வெல் என்ற ஆண்கள் சிறைச்சாலை உள்ளது.
 
இங்கு இரண்டு சிறைக்கைதிகள் அங்குள்ள கழிவறையில் மல்யுத்த வீரர்கள் போன்று ஒருவரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிக்கொண்டனர். அதில் குறித்த நபர் கையில் துணி சுற்றிகொண்டு மற்றொரு நபரை குத்துவது மற்றும் தூக்கி அடிப்பது போன்று அந்த சம்பவம் நடந்துள்ளது.
 
இதைக் கண்ட அங்கிருந்த சக கைதிகள் தடுக்கவில்லை என்றும் அவர்கள் ரசித்து உற்சாகப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி குறித்த நபர்கள் சண்டை போட்டதை, அங்கிருந்த நபர் வீடியோ எடுத்துள்ளார்.
 
இது தான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. தடை செய்யப்பட்ட சிறை ஒன்றில் எப்படி ஒரு போன் என்று பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் இம்மாதத்தின் தொடக்கத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.
 
இவ்வாறு இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் முகம் முழுவதும் இரத்தம் வழிந்ததாக கூறப்படுகிறது. இதை சுமார் 20 க்கும் மேற்பட்ட கைதிகள் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.
 
இது தொடர்பாக பிர்மிங்காம் இணையதளத்திற்கு புகார் சென்றுள்ளது. மேலும் தடைசெய்யப்பட்ட சிறைச்சாலையில் எப்படி போன் வந்தது என்பது மிகவும் வெட்ககேடான செயல் என்று கூறப்படுகிறது.
 
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருவதாகவும், அது ஹெல்வெல் சிறைச்சாலையில் தான் நடந்ததா என்பதை உறுதிசெய்யமுடியவில்லை என்றும் இதனால் இச்சம்பவம் தொடர்பாக முழுவிசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்று கூறப்படுகிறது.
 
 

மூலக்கதை