இனி ஒரு பவுண்ட் நாணயங்கள் செல்லாது: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வங்கி!

PARIS TAMIL  PARIS TAMIL
இனி ஒரு பவுண்ட் நாணயங்கள் செல்லாது: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வங்கி!

 பிரித்தானியாவில் இனி ஒரு பவுண்டு வட்ட வடிவமான பழைய நாணயங்கள் வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து செல்லுபடியாகாது என பிரித்தானியா வங்கி அறிவித்துள்ளது.

 
பிரித்தானியாவில் புழக்கத்தில் இருக்கும் போலி ஒரு பவுண்டு நாணயங்களை ஒழிக்கும் பொருட்டு புத்தம் புது ஒரு பவுண்டு நாணயங்களை வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிட உள்ளனர்.
 
புது வேலைப்பாடுடன் 12 பக்கங்கள் கொண்ட இந்த நாணயங்கள் குறிப்பிட்ட காலகட்டம் வரை பழைய நாணயங்களுடன் புழக்கத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் பிரித்தானியா வங்கியானது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தற்போது புழக்கத்தில் இருக்கும் வட்ட வடிவமான ஒரு பவுண்டு நாணயங்கள் வரும் அக்டோபர் மாதம் 16 ஆம் திகதியில் இருந்து செல்லுபடியாகாது எனவும், குறித்த நாணயங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் வாங்கவோ வினியோகிக்கவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
 
ஆனால், குறித்த வட்ட வடிவமான பழைய நாணயங்களை அதாது வங்கியின் வாடிக்கையாளர்கள் மாற்றிக்கொள்ளும் வசதியையும் வங்கி அறிவித்துள்ளது. இதனிடையே குறித்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் பேசிய வல்லுநர்களில் ஒருவரான Martin Lewis பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
 
எவரேனும் பழைய நாணயங்களை சேமித்து வைத்திருந்தால் கண்டிப்பாக அவை அனைத்தையும் உடனடியாக மாற்றிக் கொள்ளவும் என கேட்டுக்கொண்டார்.
 
புதிதாக வெளியாகவிருக்கும் நாணயமானது பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இருவேறு உலோகங்களால் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
காரணம் தற்போது புழக்கத்தில் இருக்கும் வட்ட வடிவமான ஒரு பவுண்டு நாணயங்களில் 30-ல் ஒன்று போலியான நாணயம் என அரசு அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை