ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா வரை எதிரொலிக்கும் போராட்டம்

தினகரன்  தினகரன்

லண்டன்: ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி மேற்கொண்டு வரும் தமிழர்களின் போராட்டம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை என பல்வேறு நாடுகளில் பலமாக எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் லண்டன் தமிழ் சங்கம், உலக தமிழ் அமைப்பு மற்றும் பிரிட்டிஷ் தென் இந்தியர்கள் உள்பட பல்வேறு குழுக்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான இங்கிலாந்து வாழ் இந்திய தமிழர்கள் லண்டன் மற்றும் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இலங்கையில், தமிழர்கள் அதிக உள்ள வடக்குபகுதியின் தலைநகரான யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.  ‘‘ஜல்லிக்கட்டை ஏன் தடை செய்தீர்கள்? அது எங்களது கலாச்சாரம்’’ என்று அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர். ஆஸ்திரேலியாவில் மெல்ேபார்ன், சிட்னி பகுதிகளில் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மூலக்கதை