பிரேசில் கால்பந்து வீரர்கள் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது - கொலம்பியாவில் பயங்கரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரேசில் கால்பந்து வீரர்கள் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது  கொலம்பியாவில் பயங்கரம்


பொகோடா,- பிரேசில் கால்பந்து அணி வீரர்கள் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது. கொலம்பியாவில் நடந்த இந்த விபத்தில், வீரர்கள் கதி என்னவாயிற்று என தெரியவில்லை.

மீட்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இருந்து கொலம்பியாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. பிரேசில் கால்பந்து அணியினர் உட்பட 81 பேர் விமானத்தில் இருந்தனர்.

கொலம்பியாவின் மெடலின் விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்த நிலையில், அங்குள்ள மலைப் பகுதியில் விமானம் திடீரென விழுந்தது.

இதையடுத்து, கொலம்பியா நாட்டு மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

விழுந்த விமானத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்களின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.

இந்நிலையில், 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. விபத்து நடந்த சமயத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இதன் காரணமாக விபத்து நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


பிரேசிலை சேர்ந்த கால்பந்து வீரர்கள், கொலம்பியாவில் நாளை நடைபெறும் போட்டியில் பங்கேற்க சென்றிருந்தனர்.   இந்நிலையில் நடந்த இந்த விமான விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை