இந்தோனேஷியாவில் நில நடுக்கம் இடிபாடுகளில் சிக்கி 30 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்தோனேஷியாவில் நில நடுக்கம் இடிபாடுகளில் சிக்கி 30 பேர் பலி


ஜாவா, -இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6. 5 புள்ளிகள் பதிவாகின.

இதனால் கட்டிடங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி 30 பேர் பலியாகிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவுக்கு அருகே இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6. 5 புள்ளிகள் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக சுமத்ரா அருகே அச்சே மாகாணத்தில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

பல கட்டிடங்கள் இடிந்தன.   இந்த இடிபாடுகளில் சிக்கி 30 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அதே நேரத்தில் நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

.

மூலக்கதை