இங்கிலாந்தின் சர்வதேச கடற்பகுதி ரோந்து போட்டியில் பதக்கம் வென்ற இந்திய ராணுவம்

தினத்தந்தி  தினத்தந்தி
இங்கிலாந்தின் சர்வதேச கடற்பகுதி ரோந்து போட்டியில் பதக்கம் வென்ற இந்திய ராணுவம்

இங்கிலாந்து ராணுவம் ஆண்டிற்கு ஒரு முறை Cambrian Patrol exercise என்ற பெயரில் சர்வதேச அளவிலான கடற்பகுதி ரோந்துப் போட்டியை நடத்துகிறது. இந்த ஆண்டு வேல்ஸ் கடற்பகுதியில் இந்த போட்டி நடைபெற்றது.

இளைய ராணுவ வீரர்களுக்கு கடும் சவாலாக உள்ள இந்த போட்டியில் இந்திய ராணுவத்தின் 8 பேர் அடங்கிய 8 கூர்கா ஆயுதப் படைப்பிரிவின் 2வது அணியினர் வென்று வெற்றிவாகை சூடியுள்ளனர்.

இதனையடுத்து அவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்துள்ளது பிரிட்டன் ராணுவம். ராணுவத்தின் டுவிட்டர் பக்கத்தில் இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, பதக்கம் வழங்கும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.


ongratulations to 2nd Btn 8 Gorkha Rifles on their gold medal at #CambrianPatrol. Consistently superb. @adgpi @timesofindia @BritishArmy pic.twitter.com/E817CHZE6H

— Army Wales (@Army_Wales) October 21, 2016

மூலக்கதை