இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க சீனா முயற்சி

தினத்தந்தி  தினத்தந்தி
இந்தியாபாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க சீனா முயற்சி

பீஜிங்,

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க சீனா முயற்சித்து வருவதாகவும், இது தொடர்பாக இரு நாடுகளுடனும் தொடர்பு கொண்டு பேசி வருவதாகவும் சீன வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் கெங் சாங் இன்று பீஜிங் நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான தகவல் தொடர்புகளை மேம்படுத்தி கருத்து வேறுபாடுகளை களைந்து தெற்கு ஆசிய பிராந்தியத்தின் அமைதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய பாடுபடும் என்று சீனா நம்புவதாகவும் அப்போது அவர் கூறினார்.

காஷ்மீர் பிரச்சினைக்கு இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்றும் பேட்டியின் போது அவர் குறிப்பிட்டார்.
 

மூலக்கதை