ரூ. 5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பிடிபட்டன

தினமணி  தினமணி
ரூ. 5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பிடிபட்டன

நாகலாபுரம் அருகே வனத்துறையினர் நடத்திய வாகனச் சோதனையில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பிடிபட்டன.

இதுதொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சத்தியவேடு வனத்துறையினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாகலாபுரம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு மினி லாரி சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றது.

இதையடுத்து, அந்த வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்ற வனத்துறையினர் ராஜகுண்டம் அருகே அந்த மினி லாரியை மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அதனை, சோதனை செய்ததில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான 792 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. பின்னர், அவற்றைப் பறிமுதல் செய்து லாரி ஓட்டுநரைக் கைது செய்தனர்.

விசாரணையில், அவர் சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், இக்கடத்தல் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த சத்தியவேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மூலக்கதை