மோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல்

தினமலர்  தினமலர்
மோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல்

இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் மோடி அரசின் கீழ் இருக்கும் அணுஆயுதம் பாதுகாப்பாக இருக்க முடியாது என்றும், இதனை உலக நாடுகள் கவனிக்க வேண்டும் என்றும் பாக்., பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.


சமீபத்தில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் பேசுகையில், அணுஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம். வரும் கால சூழலுக்கு ஏற்ப அணுஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம் என்றும் தெரிவித்திருந்தார்.
இவரது பேச்சை கண்டு நடுங்கிப்போன பாக்., பிரதமர் இம்ரான்கான்; அவரது டுவிட்டரில்;பாசிசம் மற்றும் இந்து மேலாதிக்க மோடி அரசின் ஆட்சியின் கீழ் இருக்கும் இந்தியாவின் அணு ஆயுத பாதுகாப்பு பற்றி உலகம் பொறுப்புடன் கவனம் கொள்ளவேண்டும் இது குறிப்பிட்ட பிராந்திய பிரச்னை மட்டுமல்ல. உலகம் முழுவதும் தாக்கம் ஏற்படுத்தக் கூடும்.


ஏற்கெனவே 40 லட்சம் முஸ்லீம்கள் கைது முகாம்களையும், குடியுரிமை ரத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ். காரர்கள் போக்கு மோசமாக உள்ளது. சர்வதேச நாடுகள் இப்போதே தலையிடவில்லையெனில் இது மேலும் பரவக்கூடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை