ஹாங்காங் எல்லையில் சீனா படைகளைக் குவிக்கிறது: உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ஹாங்காங் எல்லையில் சீனா படைகளைக் குவிக்கிறது: உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

 ஹாங்காங்: ஹாங்காங் எல்லையை நோக்கி தனது  படைகளை சீனா குவித்து வருவதை உளவுத்துறை தகவல்கள் தெரிவிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அனைவரும் அமைதிகாக்க வேண்டும் என்றும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னர் ஆங்கிலேயர் காலணி ஆதிக்க பிரதேசமாக இருந்த ஹாங்காங்கில் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருகின்றன. ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவிற்கு மாற்றம் செய்யும் அரசின் முடிவு மக்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கெரிலாம் பதவி விலகக்கோரி போராட்டங்கள் வலுவடைத்துள்ளன. இந்நிலையில் சீனா தனது படைகளை ஹாங்காங் எல்லையில் நிறுத்தியிருப்பதாக டிரம்ப் கூறியுள்ளது, போராட்டத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது.

மூலக்கதை