ஆஸ்திரேலியா சென்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

தினமலர்  தினமலர்
ஆஸ்திரேலியா சென்றார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

சிட்னி : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றார். சிட்னி நகரில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது இப்பயணத்தில் ஆஸி., பிரதமர் ஸ்காட் மாரிசனை சந்தித்து, இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் இந்திய வம்சாவளியினரை சந்தித்தும் பேச்சுவார்த்தை நடத்துகிறார். ஜனாதிபதியுடன் மத்திய அமைச்சர்கள் அனந்த் குமார் ஹெக்டே, கமாக்யா பிரசாத், ஹீனா விஜய் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

மூலக்கதை