அமெரிக்காவின் சிகாகோவிலுள்ள பிரபல மருத்துவமனையில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு : மூவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
அமெரிக்காவின் சிகாகோவிலுள்ள பிரபல மருத்துவமனையில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு : மூவர் உயிரிழப்பு

சிகாகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் போலீஸ் அதிகாரி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிகாகோ நகரில் உள்ள பிரபலமான மருத்துவமனை மெர்சி. இம்மருத்துவமனையின் வாயில் அருகே மர்ம நபர் ஒருவர் வெகுநேரமாக பதுங்கியிருந்துள்ளார். திடீரென வெளிப்பட்ட அவர் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் மருத்துவமனை வளாகத்திற்குள் சரமாரியாக சுட துவங்கினார். இந்த தாக்குதலில் பெண் மருத்துவர் ஒருவர் பலியானார். அருகில் இருந்த மற்றொரு பெண் படுகாயமடைந்தார். துயர சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இதனையறிந்த போலீசார் மருத்துவமனையை சுற்றி வளைத்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த மர்மநபர் போலீஸாரை மீதும் துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினார். இதில் சாமுவேல் என்ற போலீஸ் அதிகாரியும், மருத்துவமனை ஊழியர் ஒருவரும் பலியானார்கள். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் இறந்து போனார். ஆனாவ் இறந்த மர்ம நபர் போலீஸாரின் பதில் தாக்குதலில் பலியானாரா அல்லது தன்னை தானே சுட்டு கொண்டு இறந்தாரா என்பது உறுதி செய்யப்படவில்லை. தற்போது போலீசார் மருத்துவமனையை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

மூலக்கதை