வாழைப்பழம் ஏற்றிவந்த கப்பலில் மீட்கப்பட்ட அதிர்ச்சி பொருள்!
நியூஸிலந்தின் ஆக்லந்தில் வாழைப்பழம் ஏற்றிவந்த சரக்குக் கப்பலில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 25 மில்லியன் டாலர் மதிப்புள்ள கஞ்சாவைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதன் தொடர்பில் 41 வயது ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் எடை 190 கிலோகிராம்.
நியூஸிலந்தில் ஆக அதிக அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை.
கடந்த ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி, சரக்குக் கப்பல் பனாமாவிலிருந்து புறப்பட்டதாகவும், ஆகஸ்ட் 20ஆம் தேதி ஆக்லந்து வந்தடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடத்தி வரப்பட்ட கஞ்சா ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்படவிருந்திருந்தது என்றும் அதிகாரிகள் கூறினர்.
சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.