ஒபாமா, ஹிலாரி, ஜோ பிடெனுக்கு வெடிகுண்டு பார்சல்கள்- அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ஒபாமா, ஹிலாரி, ஜோ பிடென் வீடுகளுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டு உள்ளதற்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்களை உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைப்பது வழக்கம்.

அந்த வகையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரி களுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பார்சல்களை இடைமறித்து அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றினர்.

ஒபாமா, ஹிலாரியை தொடர்ந்து முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் வீட்டுக்கும் வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய பிரமுகர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டு உள்ள சம்பவத்துக்கு அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்

மூலக்கதை