தேசதுரோக வழக்கு நவாஸ் ஷெரீபுக்கு, 'சம்மன்'

தினமலர்  தினமலர்
தேசதுரோக வழக்கு நவாஸ் ஷெரீபுக்கு, சம்மன்

லாகூர்: அண்டை நாடான, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர், நவாஸ் ஷெரீப், 68. இவர், சமீபத்திய பேட்டி ஒன்றில், 'மும்பை குண்டு வெடிப்பு தாக்குதலில், பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது' என, கூறினார். இதையடுத்து, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், நவாஸ் ஷெரீபுக்கு எதிராக, லாகூர் உயர் நீதிமன்றத்தில், தேசத் துரோக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அக். 8ல், நேரில் ஆஜராகும்படி, நவாஸ் ஷெரீபுக்கு, நீதிமன்றம், 'சம்மன்' அனுப்பியது.

மூலக்கதை