இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த இம்ரான் கான் மோடிக்கு அழைப்பு

தினகரன்  தினகரன்
இந்தியா  பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த இம்ரான் கான் மோடிக்கு அழைப்பு

இஸ்லாமாபாத்: இந்த மாத இறுதியில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தின்போது இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோர் சந்தித்து, இரு நாட்டு உறவுகள் குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.மேலும் இக்கூட்டத்தில் இருநாடுகளின் வெளியுறவுகள் அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு இம்ரான் கான் மோடிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அனைத்து முக்கிய பிரச்சனைகள் குறித்தும் விரிவாக பேச்சு நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக இம்ரான் கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை