வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலி..!!

PARIS TAMIL  PARIS TAMIL
வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலி..!!

நைஜீரியாவில் பெய்த கனமழைக்கு 100 பேர் உயிரிழந்துள்ளனர் என பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
நைஜீரியாவில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. 
 
குறித்த மழையால் நைஜீரியாவில் உள்ள 10க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
 
அங்குள்ள கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய மாகாணங்களை பேரிடர் மாகாணங்களாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு அறிவித்துள்ளது

மூலக்கதை