அமெரிக்காவை நெருங்கும் பயங்கர புயல் சின்னம்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவை நெருங்கும் பயங்கர புயல் சின்னம்

நியூயார்க் : அதிபயங்கரமான புயல் சின்னம் அமெரிக்காவை நெருங்கி வருவதாக வானியல் துறை எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஃப்ளோரன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் புயல் இன்னும் சில நாட்களில் அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று அமெரிக்க வானியல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடல் பகுதியில் 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

மூலக்கதை