'ரூ.70 லட்சத்துக்கு சாப்பிட்டார்' இஸ்ரேல் பிரதமர் மனைவி

தினமலர்  தினமலர்
ரூ.70 லட்சத்துக்கு சாப்பிட்டார் இஸ்ரேல் பிரதமர் மனைவி

ஜெருசலேம்:ஓட்டல்களில் ஆர்டர் செய்து, 70 லட்சம் ரூபாய் அளவுக்கு சாப்பிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவின் மனைவிக்கு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடான, இஸ்ரேலின் பிரதமர், நேதன்யாஹுவின் மனைவி, சாரா நேதன்யாஹு, 60. அரசு இல்லத்தில், முழு நேர சமையல்காரர் உள்ளார். ஆனால், வெளியில் உள்ள ஓட்டல்களில் இருந்து வாங்கி சாப்பிட்டதாக, சாரா மீது குற்றஞ்சாட்டப்பட்டது.தம் பதவியை துஷ்பிரயோகம் செய்ததுடன், அரசுப் பணத்தை வீணடித்ததாக, சாரா மீது, கடந்தாண்டு வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில், தன் குற்றத்தை ஒப்புக் கொண்ட, சாரா, சமரசம் செய்து கொள்ள முன்வந்தார்.அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. சாராவை குற்றவாளி என்று அறிவித்து, 10.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், ஓட்டலில் இருந்து வாங்கி சாப்பிட்டதற்கான செலவையும், தவணை முறையில் செலுத்த உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை