தாய்லாந்து கடற்பகுதியில் 'செல்பி' புகைப்படம் எடுத்தால் மரணதண்டனை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தாய்லாந்து கடற்பகுதியில் செல்பி புகைப்படம் எடுத்தால் மரணதண்டனை!

'செல்பி'  புகைப்படம் எடுத்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என  தாய்லாந்து நாட்டு அரசு எச்சரித்து உள்ளது.

தாய்லாந்து நாட்டில் சுற்றுலாத் தலமான மாய்காவோ கடற்கரை பகுதிக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது. விமான நிலையத்துக்கு வந்துசேரும் மற்றும் புறப்பட்டு செல்லும் விமானங்கள் கடற்கரை பகுதியில் தரையில் இருந்து சில அடி உயரத்தில் மிகவும் தாழ்வாக பறந்து செல்வது வழக்கம்.

இதனால், கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தாழ்வாக பறக்கும் விமானத்துக்கு கீழ் நின்றபடி 'செல்பி' படங்களை எடுத்துவருகின்றனர். இந்த செயல், அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமின்றி, விமானிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்துகள் நிகழ வாய்ப்பு உள்ளதால், அங்கு 'செல்பி' படம் எடுக்க அரசு தடைவிதித்திருந்தது.

சுற்றுலா பயணிகள் தொடர்ந்து 'செல்பி' எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  இதையடுத்து எச்சரிக்கையை மீறி விமான நிலையம் முன்பு 'செல்பி' படம் எடுத்தால் அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

மூலக்கதை