இந்துக்களுக்கு எதிராக பாக். எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

தினகரன்  தினகரன்
இந்துக்களுக்கு எதிராக பாக். எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

பெஷாவர்: இந்துக்களுக்கு எதிராக பாகிஸ்தான் எம்எல்ஏ ஒருவர் பேசியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடரில், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்எல்ஏ. ஷேர் அசாம் வசீர், புல்வாமா தாக்குதல் தொடர்பாக பேசிய போது, ``இந்துக்கள் நமது எதிரிகள்’’ என ஆவேசமாக குறிப்பிட்டார். இதனைக் கேட்டதும் எதிர்ப்பு தெரிவித்து, இந்து எம்எல்ஏக்கள் ரவி குமார், ரஞ்சித் சிங் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து தனது வார்த்தைகளுக்காக மன்னிப்பு கேட்ட வசீர், `இந்துஸ்தான்’ (இந்தியா) என்று குறிப்பிடுவதற்கு பதில் தவறுதலாக `இந்துக்கள்’ என்று கூறியதாக தெரிவித்தார். பின்னர் அவர்கள் அவைக்கு திரும்பி கூட்டத் தொடரில் கலந்துகொண்டனர். சபாநாயகர் முஷ்டாக் கனி, வாசீரின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார். கைபர் பக்துங்க்வா சட்டப்பேரவையில் 3 இந்து எம்எல்ஏக்கள் உள்ளனர்.

மூலக்கதை