ரஷ்ய கடல் பகுதியில் சென்ற இரு கப்பல்களில் தீ விபத்து: 11 பேர் பலி

தினகரன்  தினகரன்
ரஷ்ய கடல் பகுதியில் சென்ற இரு கப்பல்களில் தீ விபத்து: 11 பேர் பலி

மாஸ்கோ: ரஷ்ய கடல் பகுதியில் இந்தியர்களுடன் சென்ற இரு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யா - கிரிமியா இடையேயான கெர்ச் நீரிணையில் தான்சானியக் கொடிகளுடன் நேற்று இரண்டு கப்பல்கள் சென்றன. கேண்டி என்ற பெயர் கொண்ட  8 பேர் இந்தியர்கள், 8 துருக்கி நாட்டைச்சேர்ந்தவர்கள் இருந்துள்ளனர். தி மேஸ்ட்ரோ என்ற கப்பலில் 15 பேர்  இருந்துள்ளனர். அவர்களில் துருக்கி நாட்டை சேர்ந்தவர்கள் 7 பேர். இந்தியாவை சேர்ந்தவர்கள் 7 பேர். இதேபோன்று லிபியா, ரஷ்யாவை சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர்.அப்போது ஒரு கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட திரவ எரிவாயு, நடுக்கடலில் டாங்கர் கப்பலான மற்றொரு கப்பலுக்கு மாற்றப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. அதை தொடர்ந்து ரஷிய மீட்பு படையினர் விரைந்து சென்றனர். 2 கப்பல்களிலும் சென்ற 31 பேரில் இதுவரை 14 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். அதில் 11 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். மற்றவர்களை மீட்கும் பணி தீவிரணமாக நடைபெற்று வருகிறது.

மூலக்கதை