சுரங்கம் சரிந்து 8 பேர் பலி

தினமலர்  தினமலர்

காபூல்,ஆப்கானிஸ்தானில் தங்கச் சுரங்கம் சரிந்ததில், அதனுள் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான ராகிஸ்தான் மாவட்டத்தில் தங்கச் சுரங்கத்தில், தங்கத் தாதுக்களை தோண்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி எட்டு பேர் பலியாகினர். இருவர் காயம் அடைந்தனர். இம்மாகாணத்தில் ஜன.4ல் ஏற்பட்ட சுரங்க விபத்தில் 40 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள சுரங்கங்கள் மிகவும் பழமையானவை. சரியான முறையில் இவற்றை பராமரிக்கததாலே அடிக்கடி விபத்து ஏற்படுவதாக சுரங்கத் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

மூலக்கதை