தோல்வியில் இருந்து தப்பிய பிரித்தானிய பிரதமர்!
பிரித்தானியா பிரதமர் தெரேசா மே க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி அடைந்துள்ளது.
நேற்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை கொன்சர்வேற்றிவ் கட்சி உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதற்கு முகம்கொடுத்த தெரசா மே வெற்றிபெற்றுள்ளார்.
இதன் மூலம் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஒரு வருடத்துக்கு பிரதமர் வசமே இருக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரகசிய வாக்கெடுப்பில் 83 வாக்குகளை அதிகப்படியாகப் பெற்று மீண்டும் தலைமைப் பொறுப்பைத் தக்க வைத்துக்கொண்டுள்ளார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், பிரெக்ஸிற்றுக்காக வாக்களித்த மக்களுக்காக அதனை வழங்குவேன் என்று பிரதமர் தெரேசா மே உறுதிவழங்கினார்.