300 அடி பள்ளத்தில் பஸ் விழுந்து 44 பேர் பலி

தினமலர்  தினமலர்
300 அடி பள்ளத்தில் பஸ் விழுந்து 44 பேர் பலி

பெரு ; பெருநாட்டின் ஒகோனா பகுதியில் பஸ் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 44 பயணிகள் உயிரிழந்தனர். ஒகோனா -- மனபெரிகனசூர் நெடுஞ்சாலையில் பயணிகளுன் பஸ் சென்று கொண்டிருந்தது. மலைப்பகுதியில் நெடுஞ்சாலையும், மலையில் இருந்து 300 அடி பள்ளத்தில் ஆறும் ஓடுகிறது. இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. நீரோட்டத்தில் பஸ் அடித்துச் செல்லப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் ஆற்றில் குதித்து சிலரை மீட்டனர். ஆழத்தில் பஸ் கவிழ்ந்துள்ளதால் உடல்களை மீட்டு வருவதே சவாலான பணியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 44 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் நிலவுகிறது.

மூலக்கதை